பெட்ரோல் பாட்டிலுடன் வந்த மாணவி.. சுற்றி வளைத்த போலீஸ்... சுதந்திர தின நிகழ்ச்சியில் பரபரப்பு

x

புதுக்கோட்டையில், சுதந்திர தின நிகழ்ச்சியின் போது, மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர் புகார் கொடுக்க பெட்ரோல் பாட்டிலுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, சுதந்திர தின நிகழ்ச்சியில், பங்கேற்றுக்கொண்டிருந்தார்.

அப்போது, பள்ளி சீருடை அணிந்து ஒரு மாணவியும், மற்றொரு பெண்மணியும் அவரை நோக்கி வந்து, கதறி அழ தொடங்கினர்.

ஆட்சியரின் பாதுகாவலர் அந்த பெண்ணின் கையில் வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை பிடுங்கி விசாரித்தனர்.

அப்போது, அருகாமையில் உள்ள வீட்டில் வசிப்போருக்கும் தங்களுக்கும் இடப்பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருவதாகவும், இது குறித்து அன்னவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் மனு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்