சென்னையில் ஆசிரியர் கேலி செய்ததால் மாடியில் இருந்து குதித்த மாணவன் - வெளியான அதிர்ச்சி வீடியோ

x

தனியார் கல்லூரியில், ஆசிரியர் கேலி செய்ததால், மன உளைச்சலுக்கு ஆளாகி, 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2ம் ஆண்டு படித்து வரும் மாணவர், விடைத்தாளில் தவறாக எழுதியதாகக் கூறி, மாணவர்கள் முன்னிலையில், ஆசிரியர் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அந்த மாணவர், கல்லூரியில் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில், அவரது 2 கால்களில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்