நெல்லை வெள்ளத்தில் அதிசயிக்க வைத்த அபூர்வ கிணறு.. இப்ப இருக்கும் நிலைமையை பார்த்து கலெக்டர் அளித்த உறுதி

x

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே, அதிசய கிணற்றை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டார். திசையன்விளை அருகே ஆயன்குளம் அதிசய கிணற்றுக்குள், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் உபரி நீர் சென்றுகொண்டே இருக்கிறது. இந்நிலையில், பலத்த மழை வெள்ளத்தால், சுற்றுச்சுவர் மற்றும் தடுப்புக்கட்டைகள் கிணற்றுக்குள் விழுந்து நீர் செல்வது தடைபட்டது. இதையடுத்து விவசாயிகளின் முயற்சியால் கட்டைகள் அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் நீரை கிணறு உள்வாங்கியது. இந்த அதிசய கிணற்றை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பார்வையிட்டார். கிணற்றின் சுற்றுச்சுவரை சீர் செய்து தர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்