துபாயில் இருந்து வந்த போன் கால்... நடுரோட்டில் கதறி அழுத பெண்

x

துபாயில் மர்மமான முறையில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி, காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் பெண் மனு அளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெடுங்காடு பொன்பேத்தி கிராமத்தை சேர்ந்த வீரமணி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஷார்ஜா சென்ற நிலையில், பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு வருவதாக மனைவி சத்யாவிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால், திடீரென வீரமணி உயிரிழந்ததாக தொலைபேசி வாயிலாக அவரது மனைவிக்கு தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சத்யா, தனது கணவரின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டுமெனவும், உடலை மீட்டுத்தர உதவ வேண்டுமெனவும் ஆட்சியர் குலோத்துங்கனிடம் மனு அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்