அம்மாவுடன் தகாத உறவில் இருந்த நபர்... மகன்கள் கையில் எடுத்த கொடூர முடிவு

x

முள்ளக்காடு ராஜீவ் நகரை சேர்ந்தவர் முனியசாமி. உப்பள தொழிலாளியான இவருக்கு திருமணமான நிலையில், இவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கணவரை இழந்து தனியே வசித்து வந்த அதே பகுதியை சேர்ந்த நிர்மலா என்பவருடன் முனியசாமி தகாத உறவில் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதையறிந்து ஆத்திரத்துக்குள்ளான நிர்மலாவின் இரு மகன்கள், சம்பவத்தன்று சைக்கிளில் சென்று கொண்டிருந்த முனியசாமியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முனியசாமியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தலைமறைவாகவுள்ள சகோதரர்கள் சதீஷ் மற்றும் சுதாகரை வலை வீசி தேடி வருகின்றனர். இதனிடையே, முள்ளக்காடு பகுதியில் அதிகரித்து வரும் போதைப்பழக்கத்தால் முனியசாமியை இருவர் கஞ்சா போதையில் வெட்டிக் கொன்றதாக கூறி குற்றம்சுமத்திய அவரின் உறவினர்கள், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது


Next Story

மேலும் செய்திகள்