காவு வாங்கிய புதிய டிராக்டர்...எமனாக மாறிய லுங்கி - இளைஞர் பரிதாப பலி

x

வேடசந்தூர் அருகே, டிராக்டர் உடன் இணைக்கப்பட்ட ரொடேட்டரில்(Rotator) சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..திண்டுக்கல் மாவட்டம் ஆர்.பி.பள்ளபட்டி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர், கடந்த 3 ஆண்டுகளாக வேடசந்தூர் அருகே நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் புதிதாக வாங்கிய டிராக்டரில் புதர்களை அகற்றும் ரொடேட்டரை இணைந்து, வயல்வெளியில் இறங்கி சோதனை செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் அணிந்திருந்த லுங்கி ரொடேட்டர் இயந்திரத்தில் சிக்கி இழுத்துள்ளது. இதில் தவறி விழுந்த ரஞ்சித், ரொடேட்டரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்