கடவுள் போல் காத்த அதிசய கிணறு.. திடீரென ஏற்பட்ட மாற்றம்.. அடுக்கடுக்கான கோரிக்கை வைக்கும் மக்கள்

x

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளம் அதிசயகிணறு தற்போது பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், முன்பை விட அதிகமான கன அடி தண்ணீரை உள்வாங்கியது.

ஆயன்குளம் அதிசயகிணறு கடந்த மழைக்காலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது வினாடிக்கு 2000 கன அடி தண்ணீரை உள்வாங்கியது. இந்த நிலையில் தற்போது பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் முன்பை விட அதிகமான கன அடி தண்ணீரை உள்வாங்கியது. தற்போது பெய்த மழையில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு அருவி போல் கிணற்றுக்குள் கொட்டியது. ஆயன்குளம் படுகையில் தேங்கி உள்ள சுமார் 10 கன அடி தண்ணீர் கிணற்றுக்குள் செல்வதாகவும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து, கிணற்றுக்குள் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்