காவல் நிலையத்தில் விபரீத முடிவு எடுத்த நபர் - மதுரையில் பரபரப்பு

x

மதுரையில், ஓடை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் விசாரணைக்கு மனைவியை அழைத்துச் சென்றதால், கணவர் காவல் நிலையம் முன்பு விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமங்கலம் அருகே சின்ன உலகாணி கிராமத்தில், ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் வந்தபோது, அதனை எதிர்த்து சக்திவேல் என்பவர் அரசுப் பேருந்தை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டார். இதுதொடர்பாக விசாரணை நடத்த போலீசார் வந்தபோது, சக்திவேல் இல்லாததால், அவரது மனைவியை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், காவல்நிலையத்தில் விஷம் அருந்திய நிலையில், அவரை ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்