தெருநாயை கார் ஏற்றிக் கொலை செய்த நபர் - சின்னத்திரை நடிகை காவல்நிலையத்தில் புகார்

x

போரூர் அடுத்த அய்யப்பன் தாங்கல் பகுதியை சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பவர், கர்நாடக திரைப்படங்களை இயக்கி வருகிறார். இவரது மனைவி கீதா சின்னத்திரைகளில் நடித்து வருகிறார். இந்த தம்பதி, வீட்டின் தெருவில் உள்ள தெரு நாய்களுக்கு, தினந்தோறும் சாப்பாடு வைத்து வளர்த்து வருகின்றனர். இதனிடையே, லட்சுமி நாராயணன் மற்றும் அவரது மனைவி கீதா, காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் வீட்டிற்கு வெளியே தெருவில் படுத்திருந்த நாய் ஒன்றை, அருகில் வசிக்கக்கூடிய ஜவகர் என்பவர், வேண்டுமென்றே காரில் ஏற்றிக் கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை சமர்ப்பித்த தம்பதி, நாயை கொலை செய்த ஜவகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்