வலியில் துடி துடித்த நபர்-வாக்கிங் போகும்போது டாக்டராக மாறிய முன்னாள் அமைச்சர்

x

புதுக்கோட்டை பரம்பூரில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று காலை உடற்பயிற்சிக்காக சைக்கிளில் சென்ற போது வழியில் அரசு மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொண்டார்.. அப்போது சாலை விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக அங்கு பல மணி நேரம் காத்திருந்த நிலையில், அங்கு மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சையளிக்க முடியாத சூழல் உருவானதாக கூறப்படுகிறது.. வலியால் அந்த நபர் துடிதுடித்துக் கொண்டிருந்த போது ஆய்வு பணிக்காக சென்ற விஜயபாஸ்கர், இதையறிந்து தான் மருத்துவர் என்பதால் தானே களமிறங்கி முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் செயலை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்