பிறந்த வாசம் நீங்காத குழந்தையை பெற்ற வயிறு காயாத நிலையில்.. செய்யக்கூடாததை செய்த "கொடூர தாய்"

x

ராஜபாளையத்தை அடுத்த சேத்தூர் ஜீவா நகரைச் சேர்ந்த முனியசாமியின் மனைவி முத்துச் செல்விக்கு ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, முத்துச்செல்விக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சேத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு குழந்தை குறித்து மருத்துவர்கள் கேட்டதற்கு முத்துச்செல்வி முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். விசாரணையில், முத்துச்செல்வி தனது குழந்தையை, முகவூரைச் சேர்ந்த ராஜேஷ்வரி, தென்காசியைச் சேர்ந்த ஜெயபால், ஈரோட்டைச் சேர்ந்த ரேவதி ஆகியோர் மூலமாக, அசினா என்பவருக்கு 3 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ராஜபாளையம் போலீசார், முத்துசெல்வி, ராஜேஸ்வரி, ரேவதி, அசினா ஆகியோரை கைது செய்ததுடன், ஜெயபால் என்பவரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்