நெஞ்சை பதறவைக்கும் திருட்டு.. ஊரை காக்க கண் முழிக்கும் 25 பேர் - "உள்ளே கால் வைத்தால்.."

x

ஆத்தூர் தாலுகா ஆலமரத்துப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட போக்குவரத்து நகரில், கடந்த 2 ஆண்டுகளாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது. 2 நாட்களுக்கு முன்பு, ஒரே நாளில் அடுத்தடுத்து 2 வீடுகளில் திருட்டு நடந்த‌தால், சின்னாளப்பட்டி காவல்நிலையத்தில் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அவ்வபோது காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், காவல்துறை அறிவுறுத்தல்படி, சிசிடிவி கேமராவும் வைத்துள்ளனர். அதே நேரத்தில், திருட்டை தடுப்பதற்காக போக்குவரத்து நகர் நலச்சங்கம் என்ற அமைப்பை கிராம மக்கள் உருவாக்கியுள்ளனர். இந்த சங்கம் சார்பில், இரவு நேரங்களில், ஷிப்ட் முறையில் நாள்தோறும் 25 பேர் வீதம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதிதாக யாராவது வந்தாலோ, சந்தேகப்படியாக யாரேனும் வந்தாலோ அவர்களிடன் விவரங்களை கேட்டறிந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்