டிரைவர் இல்லாமல் தானாக சென்ற அரசுப் பேருந்து... திண்டுக்கல்லில் அதிர்ச்சி

x

திண்டுக்கல் அருகே ஓட்டுனரின் அலட்சியத்தால், நகர்ந்து சென்ற பேருந்து மோதியதில் இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பேருந்து நிறுத்ததில், அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை ஆப் செய்யாமல் விட்டு விட்டு, டீக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது தானாக முன்னோக்கி நகர்ந்த பேருந்தில் சிக்கி, இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. தொடர்ந்து அப்பகுதி மக்கள், ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்