அதிவேகத்தால் நடந்த பயங்கரம்.. கடைக்குள் சொருகிய அரசு பஸ் - அதிர்ச்சி காட்சிகள்

x

செங்கல்பட்டு அருகே சாலையோரம் இருந்த கடைகுள் புகுந்த அரசு பேருந்து

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று மதியம் சுமார் 30 மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று செங்கல்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தது

அப்பொழுது செங்கல்பட்டு அடுத்த வல்லம் பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள ஹார்டுவேர்ஸ் மற்றும் டயர் கடையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பலமாக மோதியது விபத்துக்குள்ளானது

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சிறு காயங்கள் இன்றி உயிர் தப்பினர் அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்

தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இதனிடையே அரசு பேருந்து அதிவேகமாக வந்ததே விபத்திற்கு காரணம் எனக் கூறி சக வாகன ஓட்டிகள் அரசு பேருந்து ஓட்டுநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

இதன் காரணமாக இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு சூழ்நிலை காணப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்