திருவிழாவில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. திருப்பூரில் பரபரப்பு

x

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் தேர்த்திருவிழாவில் பாட்டு கச்சேரி கேட்டுக் கொண்டிருந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. திருவிழாவுக்கு தாயாருடன் வந்த 17 வயது சிறுமியை சிலர், இரு சக்கர வாகனத்தில் வெளியே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், வெள்ளக்கோயில் காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் 2 இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, மேலும் 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்