மனைவியோடு தகாத உறவிலிருந்த நண்பன்... கண்டித்தும் கேட்காததால் வெட்டி கொலை...

x
  • காரிருளுக்குள் நுழைந்த காவல் வாகனத்தின் ஒளி இருட்டில் மறைந்திருந்த கோரசம்பவத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சியது.
  • தார் சாலையில் ரத்தம் வழிந்தோட வெட்டு பட்டு இறந்து கிடந்த ஆண் சடலம்..
  • சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம்.
  • மண் தரையில் கிடந்த மது பாட்டில், சடலத்தின் கால் மாட்டில் கிடந்த சாப்பாட்டு பொட்டலம்.
  • மது விருந்து நடந்த மறுகனமே இந்த கொலை நடந்திருக்க வேண்டும் என்பதற்கான அத்தனை சாத்தியகூறுகளும் அங்கே சாட்சியாக கிடைத்தது.
  • இத்தனை கோரத்தையும் செய்தவர் வேறு யாருமல்ல...காருக்குள் சிரித்துக்கொண்டே போஸ் கொடுக்கும் இந்த கொடும்பாவி தான்.
  • என்ன நடந்தது...? கொலைக்கான காரணம் என்ன..? என்பதை அறிந்து கொள்ள விசாரனையை தொடங்கினோம்.
  • தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் தாலுக்கா காவல் நிலையம்...அன்றிரவு 9 மணியளவில் ஆய்ந்து ஓய்ந்திருந்தது.
  • திடீரென கேட்ட சில்லமரத்துபட்டியை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரின் குரல் போலீசாரையே அதிர வைத்திருக்கிறது.
  • தன்னுடன் மதுகுடித்த நபரை வெட்டிக்கொலை செய்துவிட்டதாக கூறி பகீர் கிளப்பி இருக்கிறார்.
  • ஆனால் காவல் துறையால், ஜெயபிரகாஷின் வார்த்தைகளை நம்ப முடியவில்லை. காரணம் அவரை குடிகொண்டிருந்த போதை.
  • ஆனால் தனது வார்த்தைகளில் எந்த தடுமாற்றமும் இல்லாமல் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி இருக்கிறார் ஜெயபிரகாஷ்.
  • ஜெயபிரகாஷின் இந்த வார்த்தைகள் போலீசாருக்கு சற்று சந்தேகத்தை வரவழைக்க, உடனே ரோந்து பணியில் இருந்த காவலர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
  • உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரின் சோதனை காட்சிகள் தான் இவை அத்தனையும்.
  • ரோந்து போலீசார் ஜெயபிரகாஷ் வார்த்தைகளை உறுதிபடுத்தியதை தொடர்ந்து அவரிடம் விசாரனை நடத்தி இருக்கிறார்கள்.அப்போது தான் நடந்த அனைத்து உண்மைகளும் வெளிவந்திருக்கிறது.
  • கொல்லப்பட்டவர் கருப்பசாமி...36 வயதான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. பெயிண்டராக வேலை பார்த்து வந்திருக்கிறார். இவரை ஜெயபிரகாஷ் கொலை செய்ய காரணம் கள்ளக்காதல்.
  • ஆம்.....40 வயதான ஜெயப்ரகாஷும்,கருப்பசாமியும் பாலிய ஸ்நேகிதர்கள்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜெயபிரகாஷுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. சில்லமரத்துபட்டியில் ஒரு மீன்கடை வைத்து நடத்தி வந்திருக்கிறார்.
  • தினமும் காலை 5 மணிக்கு வேலைக்கு செல்லும் ஜெயபிரகாஷ், இரவு 9 மணிக்கு தான் வீட்டிற்கு வருவார். வேலை களைப்பை போக்க தினமும் நண்பன் கருப்பசாமியுடன் மதுகுடிப்பது வழக்கம்.
  • பாட்டிலை பங்கு போட்ட அந்த நட்பு தான் பின்னாளில் ஜெயபிரகாஷின் படுக்கையையும் பங்கு போட துணிந்திருக்கிறது.
  • நண்பன் என்று நம்பி அடிக்கடி வீட்டிற்கு அழைத்து சென்ற கருப்பசாமிக்கு, ஜெயப்ரகாஷின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
  • இருவரும் தவறான உறவில் இருப்பதாக ஊரே அரசல் புரசலாக பேசி இருக்கிறது. தனது மனைவியுடன் கருப்பசாமி, ஒட்டு உறவாடுவதை ஜெயப்ரகாஷே பலமுறை கண்கூட பார்த்திருக்கிறார்.
  • இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்த ஜெயபிரகாஷ், சம்பவம் நடந்த அன்று கருப்பசாமியை ராசிங்கபுரம் அருகில் உள்ள ஆள் அரவமற்ற பகுதிக்கு மதுகுடிக்க அழைத்து சென்றிருக்கிறார்.இருவரும் அங்கே மது போதையில் மூழ்கி இருக்கிறார்கள்.
  • அந்த நேரத்தில், கள்ளக்காதல் விவகாரத்தை பற்றி நண்பனிடம் கேட்டிருக்கிறார் ஜெயப்ரகாஷ். ஆனால் அவரின் வார்த்தைக்கு கருப்பசாமி எந்த பதிலும் அளிக்கவில்லை. பழக்கத்தை கைவிட முடியாதென திமிராக கூறியதாக தெரிகிறது.
  • கருப்பசாமியின் இந்த பதில்கள், ஜெயபிரகாஷுக்கு கொலைவெறியை தூண்டியுள்ளது. உடனே வண்டியில் வைத்திருந்த மீன் வெட்டும் கத்தியை எடுத்து வந்து கருப்பசாமியின் பின் தலையில் வெட்டிக்கொலை செய்தது விசாரனையில் வெளிவந்திருக்கிறது.
  • கொலையை செய்துவிட்டு நேராக சென்று காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார் ஜெயபிரகாஷ். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், ஜெயபிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்