மூத்த மகனை பள்ளிக்கு அனுப்ப வந்த இடத்தில் ஒன்றரை வயது குழந்தையை இழந்த குடும்பம்

x

திருப்பத்தூர் அருகே, தனியார் பள்ளி வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் சிம்மனபுதூரை சேர்ந்தவர் ராஜசேகரன். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், மூத்த மகன் விஷமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எல்கேஜி படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டின் அருகே வந்த பள்ளிவேனில் மூத்த மகனை பள்ளிக்கு வழியனுப்ப வந்த ராஜசேகரன் உடன் இளையமகனான ஒன்றரை வயது குழந்தை புனிதனையும் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென பின்னோக்கி வந்த பள்ளி வேனின் சக்கரத்தில் சிக்கிய குழந்தை, சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதிர்ச்சியில் உறைந்து போன குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு கண்ணீர் விட்டு கதறியது அனைவரையும் கலங்கடித்தது. சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி பேருந்தின் ஓட்டநர் போலீசில் சரணடைந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்