தனியார் பேருந்தால் அரசு பேருந்தில் சிக்கி டாக்டர் துடிதுடித்து மரணம்.. சென்னை அருகே பயங்கரம்

x

காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை மேம்பாலத்தில் பைக் மீது பேருந்து மோதியதில் பிசியோதெரபி மருத்துவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... இலுப்பப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மருத்துவரான ஜோய்ஸ் ஜோஸ்வா, மேம்பாலத்தின் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது ஜோஸ்வாவின் பைக்கை தனியார் பேருந்து ஒன்று உரசி விட்டு சென்ற நிலையில், லை தடுமாறி சாலையில் கீழே விழுந்த ஜோஸ்வா மீது பின்னால் வந்த அரசு பேருந்தின் சக்கரம் ஏரி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்... சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜோஸ்வா மீது மோதிய இரு பேருந்துகள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்