கர்ப்பிணி பெண்ணை குத்தி கிழித்த மாடு..சென்னையில் பயங்கரம் | Chennai

x

சென்னை போரூர் அடுத்த அய்யப்பன் தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட மதுரம் நகரில் சுற்றித் திரிந்த மாடு அங்கு கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த ராமகிருஷ்ணன் என்ற முதியவரை முட்டித் தூக்கி வீசியது... இதில் அவருக்கு இடுப்பு எலும்பு உடைந்தது... அதே மாடு அந்த பகுதியில் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த 31 வயது கர்ப்பிணியை முட்டியதில் அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மற்றொரு பெண்ணையும் அந்த மாடு முட்டியுள்ளது... நாளில் அடுத்தடுத்து 3 பேரை மாடு முட்டிய நிலையில், அப்பகுதி மக்கள் போலீசுக்குத் தகவல் அளித்தனர்... காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்... 3 பேரை முட்டிய மாட்டையும், ஆபத்தான நிலையில் சுற்றி திரியும் மாடுகளையும் பிடிக்கும் பணியில் ஊராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்