நகை பட்டறையில் ஓனருக்கே தெரியாமல் 100 பவுன் திருடிய தம்பதி - கோவையில் அதிர்ச்சி சம்பவம்..

x

கோவையில் நகைப்பட்டறையில் நூறு பவுன் தங்க நகைகளை திருடிய தம்பதியை போலீசார் கைது செய்து நகைகளை மீட்டனர்.

மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஒரு நகைப் பட்டறையில் கடந்த 9 ஆண்டுகளாக நகை செய்யும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் தனது மனைவியின் பேச்சை கேட்டு பாண்டியராஜன் நகை பட்டறையில் யாரும் இல்லாத போது 100 பவுன் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகளை திருடியதாக கூறப்படுகிறது. இது குறித்து நகை பட்டறை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் பேரில் மனைவியுடன் மாயமான பாண்டியராஜனை

போலீசார் கைது செய்து 100 பவுன் நகைகளை மீட்டனர். இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்