வீட்டிற்குள் நுழைய முயன்ற நாக பாம்பு.. சூப்பர் ஹீரோவாக நின்று தடுத்த செல்லப்பிராணி பூனை

x

வீட்டிற்குள் நுழைய முயன்ற நாக பாம்பை செல்ல பிராணியான பூனை தடுத்து நிறுத்தி நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகர் பகுதியில் உள்ள விஜர் என்பவரின் வீட்டில், நான்கு அடி நீளமுள்ள நாக பாம்பு ஒன்று கேட்டில் இருந்து வீட்டின் படிக்கட்டுக்கு வந்தது. பின்னர் படிக்கட்டில் ஏறி வீட்டிற்குள் நுழைய முயன்றபோது, வீட்டின் செல்லப்பிராணியான பூனை, பாம்பை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்தது. பூனையின் சீறல் சத்தத்தை கேட்ட வீட்டார் கதவை மூடி பாம்பை வெளியேற்றினர். பாம்பு படமெடுத்து மிரட்டியபோதும், பூனை அதனை சில நிமிடம் ஆடாமல் அசையாமல் பார்த்துக்கொண்டது.


Next Story

மேலும் செய்திகள்