கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம்... பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கிய மினி லாரி | Lorry Accident

x

பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கட்டுபாட்டை இழந்த சரக்கு வாகனம் ஒன்று அங்கிருந்த தடுப்புகள் மீதும், சாலையோரம் நின்றிருந்த இளைஞர் மீதும் மோதி, அருகில் இருந்த கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாகனத்தை ஓட்டி வந்த நாட்றம்பள்ளியை சேர்ந்த ஜெயக்குமார் என்ற இளைஞர் லேசான காயங்களுடன் தப்பிய நிலையில், வேனின் பின்புறம் ஏற்றப்பட்டிருந்த சுமார் 75 ஆயிரம் மதிப்புள்ள கீரை கட்டுகள் பள்ளத்தில் கவிந்து வீணானது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பள்ளத்தில் இருந்து வேனை மீட்ட நிலையில், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்