சைடிஷ்-ஆக வாங்கிய சிக்கனில் கிடந்த வண்டு - வெளியான வைரல் வீடியோ

x

திருப்பூர் மதுபான கூடத்தில், சைடிஷில் வண்டு இருந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பூண்டி ரிங் ரோட்டிலுள்ள மதுபான கூடத்தில், கெளதம் என்ற இளைஞர் நண்பர்களுடன் மது அருந்த சென்றுள்ளார். அப்போது அவர்கள் சைடிஷ்ஷாக வாங்கிய சிக்கனில், வண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்களுக்கும், மதுபான கூட ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் மதுபான கூடத்தின் மேலாளர், கெளதமையும் அவரது நண்பர்களையும் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளார். இந்தநிலையில், சைடிஷில் வண்டு இருந்ததாக கூறி, கெளதம் தரப்பு வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்