வலிப்பு நோய் வந்த 9 மாத குழந்தை - 4 மணி நேரமாக சிகிச்சை அளிக்காததால்.. தர்ணாவில் ஈடுபட்ட உறவினர்கள்

x

மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியை சேர்ந்த ரத்தினகுமார் கிருஷ்ணவேணி தம்பதியின் 9 மாத குழந்தைக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பெற்றோர், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்த நிலையில், அங்கு 4 மணி நேரமாக காத்திருந்தும் சிகிச்சை அளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், மருத்துவமனை நிர்வாகம் அலைக்கழிப்பதாகவும், துண்டு சீட்டில் மருந்து எழுதிக் கொடுத்து, வெளியில் சென்று மருந்து வாங்கி வருமாறு செவிலியர்கள் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குழந்தையின் தந்தை ரத்தினகுமார் மற்றும் அவரது உறவினர்கள், மருத்துவமனை எதிரே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது. இதனிடையே, குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்