இளைஞர்களுக்கு டஃப் கொடுத்த முதியவர்கள்-88 வயது மூதாட்டியும், 86 வயது முதியவரும்-5 கீ.மீ தூரத்தை 59 நிமிடம் 57 வினாடிகளில்

x

சிவகாசியில், தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடைபெற்ற மாரத்தான் போட்டியில், இளைஞர்களுக்கு இணையாக 88 வயது மூதாட்டியும், 86 வயது முதியவரும் ஓடிய நிகழ்வு கவனத்தை ஈர்த்துள்ளது. போதையில்லா பசுமையான சிவகாசி என்பதை முன்னெடுத்து, 5 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதில் 5.75 கிலோமீட்டர் தூரத்திற்கான பிரிவில் பங்கேற்ற மூதாட்டி மற்றும் முதியவர், அனைவருக்கும் சவால் விடுக்கும் வகையில் 59 நிமிடம் 57 வினாடிகளில் ஓட்டமும், நடையுமாய் எல்லைக்கோட்டை கடந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்