கோயிலுக்கு சென்ற 50 பேர்...சென்னை NH-ல் பயங்கர விபத்து - 15 பெண்கள் உட்பட 24 பேர் படுகாயம்

x

கோயிலுக்கு சென்ற 50 பேர்...சென்னை NH-ல் பயங்கர விபத்து - 15 பெண்கள் உட்பட 24 பேர் படுகாயம்

காஞ்சிபுரம் அருகே சுற்றுலா பேருந்து சரக்கு லாரியின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் 15 பெண்கள் உட்பட 24 பேர் காயம் அடைந்தனர். நாமக்கல் காளியாம்பட்டியைச் சேர்ந்த உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் கோயிலுக்குச் செல்ல காஞ்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர். சுற்றுலா பேருந்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த பொழுது காஞ்சிபுரம் அருகே வெள்ளை கேட் பகுதியில் முன்னாள் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இவ்விபத்தில் பேருந்தில் இருந்த 15 பெண்கள் உட்பட 24 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்