கடலை தாண்ட முயன்ற 4 சிறுவர்கள் துடிதுடித்து மரணம் - அதிர்ச்சி காட்சிகள் | Greece

x

கிரீஸ் நாட்டில் இருவேறு இடங்களில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சோமாஸ் தீவில் இருந்து, புலம்பெயர்ந்து ஏராளமானோர் படகுகள் மூலம் கடலை கடக்க முயன்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், கடலில் மூழ்கி 3 சிறுமிகள், ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளனர். மற்றொரு விபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், கடலில் த‌த்தளித்த 23 பேரை கடலோர பாதுகாப்புப் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்