ரூ.3 கோடி மதிப்புள்ள 300 கிலோ கஞ்சா பறிமுதல்.. தனிப்படை போலீசார் அதிரடி

x

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட கஞ்சா, விசைப்படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருப்பதாக நாகை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து கீழையூர் மேலப்பிடாகை அருகே தனிப்படை போலீசார், இரு சொகுசு காரில் வந்த கஞ்சா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்தனர். அதில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 300 கிலோ கஞ்சா மூட்டைகள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த விக்னேஷ், வேதாரண்யம் மற்றும் விழுந்தமாவடியை சேர்ந்த கோபிநாத், வீரக்குமார், வீரமுரசு, முருகானந்தம், ஹரிகிருஷ்ணன், கோவையை சேர்ந்த சசிகுமார், தேனியை சேர்ந்த சுதர்சனம் ஆகிய எட்டு பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்