3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை-கட்டிவைத்து வெளுத்த ஊர்மக்கள்-திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்

x

திருவள்ளூர் பழவேற்காட்டில் 3 வயது குழந்தையைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற நபரை ஊர் மக்கள் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். கோபால் என்ற 38 வயதான அந்த ஆசாமி அதே பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமியை வன்புணர்வு செய்ய முயன்ற நிலையில், குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அந்த ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுமி உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோபால் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்