பள்ளி சென்று வீடு திரும்பாத 3 மாணவிகள்.. கரூரில் அதிர்ச்சி - ஒரே போன் கால்.. அதிர்ந்த பெற்றோர்

x

கரூர் அருகே பள்ளி மாணவிகள் 3 பேர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராயனூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த மூன்று மாணவிகள் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், மாலை வீட்டிற்கு வராத நிலையில் பெற்றோர் பள்ளியை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அப்போது, மூவரும் பள்ளிக்கு செல்லவில்லை என தெரியவர அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்படி, வழக்குபதிந்த தாந்தோணிமலை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்