25கிலோ கெட்டுப்போன இறைச்சி...தமிழகம் முழுவதும் அதிரடி ரெய்டு...| Tamilnadu

x

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் திடீர் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கெட்டுப்போன 25 கிலோ கோழி இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர். கடையநல்லூர், கிருஷ்ணாபுரம், யூனியன் அலுவலகம் ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் கெட்டுப்போன 25 கிலோ கோழி இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர். இதுதொடர்பாக 5 உணவகங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்