சப்பாத்தி சுட்டும், டீ போட்டும் வாக்கு சேகரித்த பெண் வேட்பாளர் ...!

சப்பாத்தி சுட்டும், டீ போட்டும் வாக்கு சேகரித்த பெண் வேட்பாளர் ...!
x
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு அடைந்து, பிரசார களம் சூடுபிடித்து உள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் மாநகராட்சியின் 8வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இந்திராணி, வாக்காளர்களை கவரும் வகையில், ஹோட்டலில் சப்பாத்தி சுட்டுக்கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதே போல, 22வது வார்டில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சீனிவாசன் பாபு, பொதுமக்களுக்கு டீ போட்டுக்கொடுத்தும், தப்பு அடித்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்