குப்பை தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை.. குழந்தையை மீட்டு சுத்தப்படுத்திய பெண்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆண பெண் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசி சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.
x
குப்பை தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை.. குழந்தையை மீட்டு சுத்தப்படுத்திய பெண் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆண பெண் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசி சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது. மார்க்கம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே குப்பையை கொட்ட அஃப்ரோஜ் என்ற பெண் சென்றுள்ளார். அப்பொழுது குப்பைகளுடன் கிடந்த கட்டப்பையில் குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அந்த குழந்தையை எடுத்து வந்து குளிப்பாட்டி சுத்தம் செய்த அந்த பெண், போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் குழந்தையை வீச்சி சென்றவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்