பெண்ணை தாக்கி 8 சவரன் நகை பறித்த இளைஞர்கள் - திருநங்கை கைது செய்து சிறையில் அடைப்பு !

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் மல்லிகா. இவர் கடந்த டிசம்பர் மாதம் எம்.கே.பி நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் இருவர் அவரை தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த 8 சவரன் தங்க நகையை பறித்து சென்றனர்.
x
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் மல்லிகா. இவர் கடந்த டிசம்பர் மாதம் எம்.கே.பி நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் இருவர் அவரை தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த 8 சவரன் தங்க நகையை பறித்து சென்றனர். நகைபறிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தேடிவந்த நிலையில், மாதவரத்தை சேர்ந்த அஜித் மற்றும் வியாசர்பாடியை சேர்ந்த முகேஷ் ஆகிய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இதனிடையே இவர்கள் திருடி வரும் நகைகளை விற்றும், அடமானம் வைத்தும் திருடர்களுக்கு உதவி வந்ததாக அயனாவரத்தை சேர்ந்த திருநங்கை சஞ்சனாவை போலீசார் தேடிவந்தனர். தற்போது, எம்.கே.பி நகர் போலீசார் திரு நங்கை சஞ்சனாவை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்