அரசு மருத்துவர்கள் - 50% இட ஒதுக்கீடு வழங்கலாம்

அரசு மருத்துவர்களுக்கு சிறப்பு மருத்துவ படிப்பு 50 சதவீத இட ஒதுக்கீட்டை, எந்த தடையும் இல்லாத பட்சத்தில் செயல்படுத்தலாம் என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு மருத்துவர்கள் - 50% இட ஒதுக்கீடு வழங்கலாம்
x
சிறப்பு நிபுணத்துவ மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீடு, கடந்த 2017ஆம் ஆண்டு முதல்,
நிறுத்தப்பட்டது.

2021- 22ம் கல்வியாண்டில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாததை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில்,  2020 -21ம் ஆண்டு இட ஒதுக்கீடு வழங்காததை எதிர்த்த வழக்கில், 2020-2021 ஆம் கல்வியாண்டு செயல்படுத்த முடியாது என்று,உச்ச நீதிமன்றத்தில்,  தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், அதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு மட்டுமே பொருந்தும் என்று உத்தரவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த கல்வி ஆண்டில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, இந்த கல்வி ஆண்டில் அரசு மருத்துவர்களுக்கு சிறப்பு மருத்துவ படிப்பு 50 சதவீத இட ஒதுக்கீட்டை , எந்த ஒரு சட்ட தடையும் இல்லாத பட்சத்தில் செயல்படுத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்