"ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும்" - உயர்நீதிமன்ற கிளையில் மனு

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தமிழக அரசு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்து இடைக்கால தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
x
திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

எனவே தற்போது உள்ள சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனஅந்த  மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்