கொரோனா தொற்று பாதித்ததால் தான் பற்கள் விழுந்ததாக நினைத்து இளம்பெண் தற்கொலை

கொரோனா தொற்று பாதித்ததால் தான் பற்கள் விழுந்ததாக நினைத்து சேலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
x
சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரின் மனைவி நந்தினி. இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நந்தினி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் கருப்பு பூஞ்சை தொற்றாலும் பாதிக்கப்பட்ட நந்தினி, சிகிச்சையால் உடல் நலம் பெற்று வீடு திரும்பினார். இதனிடையே திடீரென அவரின் பற்கள் விழுந்ததாக தெரிகிறது. கொரோனா தொற்றால் தான் பற்கள் விழுந்ததாக நினைத்து விரக்தியில் இருந்த அவர், திடீரென தூக்க மாத்திரைகளை அதிகளவில் சாப்பிட்டுள்ளார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நந்தினி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்