நீட் விவகாரம் - இன்று அனைத்து கட்சி கூட்டம்

சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது.
x
சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் நீட் தேர்வு தொடர்பாக ஆலோசிக்க, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது குறித்து, சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்தார். இந்நிலையில், இன்று  காலை கூட்டத்தை  கூட்டுவது என முடிவெடுக்கப்பட்டு, அதற்காக அனைத்து தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, இன்று  காலை 10.30 மணிக்கு, தலைமைச்செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில், இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நீட் தேர்வை  ரத்து செய்ய அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்