"பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு தடை"

சென்னை தாம்பரம் மாநகர காவல் எல்லைப்பகுதியில் வருகிற 10-ஆம் தேதி வரை உள்ளரங்கு மற்றும் பொது இடங்களில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
x
சென்னை தாம்பரம் மாநகர காவல் எல்லைப்பகுதியில் வருகிற 10-ஆம் தேதி வரை உள்ளரங்கு மற்றும் பொது இடங்களில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தாம்பரம் மாநகர காவல் ஆணையர் எம். ரவி வெளியிட்ட உத்தரவில், பொது இடங்களில் பொது நிகழ்ச்சிகளுக்கு ஜனவரி பத்தாம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவுவதை தடுக்க சமூக இடைவெளியை பேணுதல், முககவசம் அணிவதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை செயல்படுத்தவும் இந்த உத்தரவு அவசியம் என கூறப்பட்டுள்ளது. இந்த தடையை மீறுபவர்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை நிலைநாட்டும் பொருட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்