மம்முட்டி நிலம் புறம்போக்கு நிலமா? விளக்கத்தை கேட்க உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் மம்முட்டிக்கு சொந்தமான நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக அறிவித்த உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம், மம்முட்டி தரப்பு விளக்கத்தையும் கேட்க நில நிர்வாக ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.
x
செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழிபள்ளம் கிராமத்தில் இருக்கும் மம்முட்டி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை, கழுவேலி புறம்போக்கு எனும் காப்புக்காடு நிலமாக அறிவித்து நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். 

இந்த உத்தரவை எதிர்த்து மம்முட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், 2007ஆம் ஆண்டு தனியார் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தை,  கழுவேலி புறம்போக்காக மறுவகைபடுத்தபட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தங்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் புறம்போக்கு நிலமாக அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மம்முட்டி தரப்பில் வாதிடப்பட்டது.

அதையேற்ற நீதிபதி, மமுட்டிக்கு சொந்தமான நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக மறுவகைப்படுத்தி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், நிலம் தொடர்பான விவகாரத்தில் மம்முட்டி தரப்பினரின் விளக்கத்தைக் கேட்டு, 12 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்பயும், நில நிர்வாக ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 






Next Story

மேலும் செய்திகள்