மழை பாதிப்பு குறித்து முதல்வர் ஆய்வு - மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் முதலமைச்சர்

சென்னை அருகே செம்மஞ்சேரியில் மழைநீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.
x
மழை ஓய்ந்த நிலையிலும், செம்மஞ்சேரியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இன்றைய தினம் செம்மஞ்சேரி பகுதிக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், மழைநீரில் நடந்து சென்று பாதிப்புகளை ஆய்வு செய்தார். மழைநீரை வடிய வைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், சில ஆலோசனைகளும் வழங்கினார். பின்னர், அதிகம் பாதிக்கப்பட்ட குமரன்நகர் மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரண உதவி வழங்கினார். அங்கு திரண்டிருந்த மக்களின் குறைகளையும் முதலமைச்சர் கேட்டறிந்தார். 




 


Next Story

மேலும் செய்திகள்