பழமையான கலை பொருளை திருடி விற்பனை; இருவர் கைது - சிறையில் அடைப்பு
சென்னையில் பழமையான கலை பொருளை திருடி விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் பழமையான கலை பொருளை திருடி விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாலஸ் தோட்டம் பகுதியை சேர்ந்த சுரேஷ் பிரபாகர் என்பவரின் வீட்டில் இருந்த, மரத்திலான சாமி சிலை திடீரென மாயமானது. சிசிடிசியை ஆய்வு செய்தபோது, இளைஞர் ஒருவர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, வழக்குபதிந்த ஆயிரம் விளக்கு போலீசார், திருவல்லிக்கேணியை சேர்ந்த முத்து என்பவரை பிடித்தனர். விசாரணையில், தமீம் அன்சாரி என்பவரிடம் விற்றது தெரியவர இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Next Story