பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
x
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 
சென்னை தலைமைச்செயலகத்தில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற கூட்டத்தில், தலைமைச்செயலாளர் இறையன்பு, உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், நீர்நிலை உள்கட்டமைப்புகளான கால்வாய்கள், அணைக்கட்டுகளின் கதவுகள்,கரைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்
பேரிடர் சவால்களை திறம்பட கையாள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து துரிதமாக செயல்பட வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்