கபாலீஸ்வரர் கல்லூரி - சைவ சித்தாந்த வகுப்பு தொடக்கம் - "ஆன்மிகத்தில் ஆர்வம் உள்ளவர்கள் பயன்பெறலாம்"
சென்னை கொளத்தூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரியில் சைவ சித்தாந்த வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னை கொளத்தூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரியில் சைவ சித்தாந்த வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கல்லூரியில், ஆன்மிக சிந்தனைகளை வளர்க்கும் நோக்கில் வைச சித்தாந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு, கட்டணம் இல்லை எனவும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ள அறநிலையத்துறை, ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகளில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணபித்து பயன் பெறுமாறு வலியுறுத்தியுள்ளது.
Next Story