மாணவி தற்கொலை - பள்ளி நிர்வாகம் விளக்கம்

கரூரில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், பள்ளி நிர்வாகம் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளது.
மாணவி தற்கொலை - பள்ளி நிர்வாகம் விளக்கம்
x
கரூரில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட  நிலையில், பள்ளி நிர்வாகம் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், மாணவியின் தற்கொலை தங்களுக்கு ஆழ்ந்த வேதனையை தருவதாகவும், இந்த சம்பவத்தில் ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என  தெரியப்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. 
உண்மையான குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதில் பள்ளி நிர்வாகமும் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையான குற்றவாளியை நாம் அனைவரும் ஒன்றிணைந்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் எனவும் அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்