"பூமிநாதன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி" - முதல்வர் ஸ்டாலின்

புதுக்கோட்டை அருகே, ரோந்துப் பணியின்போது மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதனின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்து உள்ளார்.
x
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தை அறிந்து மிகவும் துயரமடைந்தேன் என்றும், 

சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறி உள்ளார்.

உயிரிழந்த பூமிநாதனின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து உடனடியாக 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டு உள்ளதாகவும்,...

குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டு இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்