பாமக மாவட்ட செயலாளர் படுகொலை வழக்கு; "தொடர்புடைய 15 பேரும் கைது" - முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தகவல்

பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் கொலை வழக்கில் தொடர்புடைய 15 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாமக மாவட்ட செயலாளர் படுகொலை வழக்கு; தொடர்புடைய 15 பேரும் கைது - முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தகவல்
x
பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் கொலை வழக்கில் தொடர்புடைய 15 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைக்கால் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் தேவமணி கடந்த 22 ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள திருநள்ளாறு போலீசார், முக்கிய குற்றவாளியான மணிமாறன் , ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கலியமூர்த்தி, ராமச்சந்திரன், அருண் உள்ளிட்ட 14 பேரை ஏற்கனவே கைது செய்திருந்தனர். மயிலாடுதுறையை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் மட்டும் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நகாரிகா பட், இதுவரை 15 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அனைவரையும் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்