தேனி அருகே வழக்கறிஞர் வெட்டிக் கொலை - பட்டப்பகலில் நடந்த பயங்கர சம்பவம்

தேனி அருகே பழிக்குப்பழியாக வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
தேனி அருகே வழக்கறிஞர் வெட்டிக் கொலை - பட்டப்பகலில் நடந்த பயங்கர சம்பவம்
x
தேனி அருகே பழிக்குப்பழியாக வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் மதன். 35 வயதான இவர், உத்தமபாளையம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். 
இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். சம்பவத்தன்று மதன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகம் அருகே அவர் சென்ற போது திடீரென வாகனத்தில் வந்த ஒரு கும்பல் மதனை வழிமறித்தது. அவரின் வாகனம் மீது மோதி அவரை கீழே தள்ளியதோடு தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். இதில் அவரின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியதாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக வந்த வழக்கறிஞர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த மதனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மதன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனுமந்தன்பட்டி அருகே ரஞ்சித்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மதனுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பழிக்கு பழி வாங்கும் நோக்கில் ரஞ்சித்குமார் சார்ந்த கும்பல் மதனை தீர்த்துக்கட்டியது தெரியவந்தது. இதன்பேரில் கொலையாளிகளை கண்டறிந்த போலீசார், 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழிக்குப்பழியாக பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது... 



Next Story

மேலும் செய்திகள்