ஜெய்பீம் விவகாரம் - நடிகர் நாசர் அறிக்கை

ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் விலை பேச முற்படுவது வேதனை அளிப்பதாக நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.
ஜெய்பீம் விவகாரம் - நடிகர் நாசர் அறிக்கை
x
ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் விலை பேச முற்படுவது வேதனை அளிப்பதாக நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில், கூட்டாக உருவாக்கப்படும் திரைப்பட ஊடகத்தில் தனியொரு நபரின் கருத்து வெளிவருவதில்லை என்றும்,

ஒவ்வொரு கலைக்கும் அதற்கான சமுதாயப் பொறுப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெய்பீம் படத்தில் நடிகர் சூர்யா, அவருக்கு கொடுத்த பொறுப்பினை செவ்வனே செய்ய முற்பட்டுள்ள நிலையில்,

வேறு உட்காரணங்கள் இருப்பதாக வர்ணம் பூசி, விலை பேச முற்படுவது வேதனையும், அச்சத்தையும் ஏற்படுத்துவதாக நாசர் கூறியுள்ளார்.

சிலர் மனம் புண்பட்டதாக கூறும் பிம்பங்கள் ஜெய்பீம் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், 

சம்பந்தபட்டவர்கள் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவது சமூதாயத்திற்கு நல்லது என்றும் நடிகர் நாசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்