கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு - சின்மயா வித்யாலயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது

கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில், சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு - சின்மயா வித்யாலயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது
x
கோவையை சேர்ந்த பிளஸ்-2 மாணவி கடந்த வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்மயா வித்யாலயா பள்ளியின் முன்னாள் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை தந்ததால், அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, அந்தப் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் தலைமறைவானார். தனிப்படை அமைத்து போலீசார் அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரைக் கோவை அழைத்து வந்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்